பொது அறிவு ( 92 )
911 . உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
நெதர்லாந்து
912 . மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது ?
மூக்கு ரேகை
913 . நாய்களே இல்லாத ஊர் எது ?
சிங்கப்பூர்
914 . ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?
ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
915 . கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் ?
44 %
916 . துடுப்புக்காலிகள் ( Pinnipeds ) வகையைச் சார்ந்த உயிரினங்கள் ?
கடற்சிங்கம் , பனிக்கடல் யானை , கடல் நாய்
917 . நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?
ரசூல் கம்சதேவ்
918 . தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் - எனப்பாடியவர் ?
பாரதிதாசன்
919 . " இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர் ?
ஜி.யு.போப்
920 . ஞானப்பச்சிலை என அழைக்கப்படுவது ?
தூதுவளை
கருத்துகள்