முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Articles லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம் - ஏழுமணி நேர வாசிப்பு கல்லூரியில் முதல்வருடம் படிக்கையில், வாசிக்கலாமே என எடுத்துவைத்தது! காலந்தள்ள, இதோ ஓர் ஏழுமணிநேரம்... கருக்கல் நேரத்தில், மிகுந்த ஆவலோடு கள்ளிக்காட்டினுள் புகுந்தேன்... அது வேறு ஓர் உலகம். சீலக்காரியும், வைரவனும் அம்மக்களுக்கு சாமிங்க... கருவாலியும், காடையும் அந்த மண்ணோட பச்சிங்க... கல்தாழையும் கள்ளிமரங்களும் வேலி பாத்துக்கிடுங்க... பஞ்சமும் பட்டினியும் அழையா விருந்தாளிங்க... கோரக்கிழங்கும் கூழ் மறுமாத்தமும் தான் வயித்த கழுவுறதெல்லாம்... கொஞ்சம் விசேசமுனா கோழிச்சோறு... வாழ்க்கைல போரட்டங்க்றது இல்லனா ஆர்வமே மறஞ்சுபோயிருங்க்றேன்... ஆனா, போராட்டம் மட்டுமே வாழ்க்கனா? அப்டி ஒருத்தருதான் இந்த கள்ளிப்பட்டிகாரது... பேயத்தேவரு அவரு பேரு... மண்ணுதான் அவரு உசுரு... "சிலபேர்தான் பிள்ளைகளை பெறுகிறார்கள்; பலபேர் பத்து மாதம் சுமந்து பிரச்சினைகளை பெறுகிறார்கள்" எனுமாறு இருந்தது அவரு பொழப்பு. பெத்தப்புள்ள பேருசொல்லாட்டியும் பேரபுள்ள இருக்கேன்னு தேறியவருதான் பேயத்தேவரு. நாச்சியாவரத்துல அவருக்கு ஒரு சிநேகிதம். அழகம்மா அவருக்கு சரிபாதி. ம...

வணங்கான்

காலங்கள் விரைந்தோடினாலும் - சில   காயங்கள் மறைந்தோடுவதில்லை !  நெடும் மாத இடைவேளிக்கு பின்னர் ஒரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. கதையின் பெயர், "வணங்கான்". ஜெயமோகனின் எழுத்துக்கள் என்றால் சொல்லவா வேண்டும். தலைப்பை கிரகித்ததும், "இறை மறுப்பாளரின் கதை" என மனதில் பதிந்து வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே தெரிந்தது. "இது இறைமறுப்பாளரினது அன்று. சாதியம் எனும் திரை மறுப்பாளரினது" என்று.     பொழிக்கம்பை நட்டுவைத்தாலும் தளிர்விடும் இயல்பு நாஞ்சில்நாட்டினது. "ஏலே பிலேய்... எனக்க மக்கா..." என்ற கொஞ்சும் கிளியின் நாக்கில் பிறக்கும் மொழியை போன்றது குமரித்தமிழ். இவ்வளவு எழிலை கொடுத்த இறை அல்லது இயற்கை, அக்காலத்தில் இந்த அழகு தெச்சணத்தை ஆண்டவர்களுக்கு நல்ல மனத்தை மட்டும் கொடுக்க தவறிவிட்டதுபோலும். தென் திருவிதாங்கூர் கொடுமைகள், நினைக்கும்போதே மனத்தை பெரும்வலியில் ஆழ்த்துபவை. மனிதனை மனிதன், விலங்குபோல் நடத்துவது அக்கால வாடிக்கை. அடி, மிதி, மானபங்கம், மறைக்கா அங்கம், அதற்குமொரு வரி, அதுவும் அளவுக்கொரு வரி மற்றும் இன்னும் பல பல விதத்தில் குறிப்பிட்ட மக...

Programming மூலமாக படம் வரையலாம் ! படம் வரைவதன் மூலமாக Programming கற்கலாம் !

படம் வரைவதில் என்ன முக்கியத்துவம்? ப்ரோக்ராம்மிங் பயன்படுத்தி படம் வரையலாமா....? வரையலாமா இல்லை. வரையலாம்! ப்ரோக்ராம்மிங்கை பொறுத்த வரையில் முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. முடியும் என முடிவுக்கட்டிவிடலாம். எனக்கு தொடக்கத்தில் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதே தெரியாது. உயிரியலில் (Biology) சாயுச்சியமாக ஆர்வம் கொண்டிருந்தேன்.        உச்சி முதல் பாதம் வரை என்ன என்ன ஆர்வமூட்டும் விடயங்கள் உள்ளன என்பதை தேடவே விரும்பிக்கொண்டிருந்தேன். ஆனால் என்ன செய்ய.... நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல்தான். உச்சி முதல் பாதம் வரை அறிய எண்ணிய என்னை, மண் முதல் விண் வரை மகத்துவம் காணச்செய்யும் பொறியியல் ஈர்த்தது. இன்று நான் ஒரு பொறியாளன். ஆனால், பூச்சி பச்சிகளையும், இலை இறகுகளையும், மீன் மிருகங்களையும், பாம்பு பறவைகளையும் பேரார்வம் கொண்டு தேடி பிடித்து ஆராய விரும்பும் வித்தியாசமான கணினி பொறியாளன்.  தொடக்கத்தில் துளி கூட கணினியின் பால் ஆர்வம் கிடையாது. கணினி அறிவும் கிடையாது. பத்தாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் SkyWin கம்ப்யூட்டர்ஸ் என அறியப்பட...