முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது அறிவு (297)

2961. பசியுணர்வை ஏற்படுத்துவது?
     லெப்டீன் (Leptin) மற்றும் க்ரெலின் (Ghrelin)  என இருவருண்டு. இவர்களே , நீண்டநேரம் நாம் சாப்பிடாமல் இருக்கும்போது , வயிற்றில் பிறக்கின்றனர். பசியுணர்வை ஏற்படுத்துகின்றனர். [பசி என்று வந்தவர்க்கு புசி என்று கொடுத்துப் பாரப்பா என பாடுகிறார் பாரதிதாசன்.]

2962. அக்காரம் என்றால் என்ன?
     சர்க்கரை / கரும்பு / கற்கண்டு
[அக்காரம் எனும் சொல் இன்றும் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது. சர்க்கரை என்ற சொல்லை சற்றே உற்றுநோக்கினால் அதனிலும் அக்காரம் ஒழிந்திருப்பதை அறியலாம். மேலும் கரும்பின் (Sugar Cane) அறிவியல் பெயர் , Sachcharum (சக்கரம்) என்பதாகும்.]


2963. அந்தகாரம் என்றால் என்ன?
     இருள்  (இருள் என்பது குறைந்தபட்ச வெளிச்சம் - பாரதியார்)
[இலங்கைத் தமிழிலும் , பழைய தமிழ் புத்தகங்களிலும் இறைபுகழ் பாடல்களிலும் இடம்பெற்ற இந்த அந்தகாரம் என்ற சொல் , கிறித்தவ பைபிளிலும் இடம்பெற காரணமாகயிருந்தவர் , இலங்கையில் சைவத்தொண்டு ஆற்றி முதன்முதலில் தமிழில் பைபிளை மொழிபெயர்த்து தந்தவரான ஆறுமுகநாவலர்.]


2964. ஒரு கூட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளிடும் பறவை?
     நெருப்புக் கோழி

2965. மிகப்பெரிய தவளை?
     ஓரா (Ora)
[மேலும் , மிக நீண்‌ட தவளை (Longest Frog) , கோலியாத்  (Goliath Frog) எனப்படுகிறது. பிலிஸ்தியனான கோலியாத்தை போன்ற‌ நெடுமாறன் போல...]

 

2966. பெரும்பாலும் மின்விளக்குகளில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு?
     நைட்ரஜன்

2967. சலவை சோடாவின் (Washing Soda) அறிவியல் பெயர்?
     சோடியம் கார்பனேட் (Na2CO3)

2968. சமையல் சோடாவின் (Baking Soda) அறிவியல் பெயர்?
     சோடியம் பை கார்பனேட் (NaHCO3)

2969. மந்தவாயு (Inert Gas) என்றால் என்ன?
     பொதுவாக இவ்வுலகிலும் அண்டத்திலும் உள்ள எல்லா தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று வினைபட்டு பல்வேறு வகையான சேர்மங்களைத் தருகின்றன. ஆனால் மந்த வளிமங்கள் (மந்த வாயுக்கள், Inert gases) எனப்படுபவை பிற தனிமங்களுடன் மிக பெரும்பாலும் சேர்ந்து வினை புரிவதில்லை. இவை உறழ் வளிமம், செயலறு வளிமம், சடத்துவ வாயு, மந்த வளிமம் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன.

2970. ஏன் மந்தவாயுக்கள் வினைபுரிவதில்லை?
     ஒவ்வோர் அணுக்களிலும் எதிர்மின் அயனிக்கான (எலக்ட்ரான்) சுற்றுப்பாதை உண்டு. மேலும், இந்த பாதையில் இவ்வளவு தான் அதிகம் என்ற வரம்பும் உண்டு. அந்த வரம்பை மந்தவாயுக்கள் அடைந்துவிட்டன. ஆம் ! பூரணமாக நிரம்பியுள்ள எலக்ட்ரான் சுற்றுப்பாதை இருப்பதனால் , எந்த ஓர் எலக்ட்ரானும் தனித்து இருப்பதில்லை. தனித்த எலக்ட்ரான்கள் தான் அணுவை, வினைபுரியச்செய்பவை. சுற்றுப்பாதையிலும் வேறோர் அணுவின் எலக்ட்ரானை வைக்க  இடம் இல்லை. தனித்த எலக்ட்ரான்கள் (Free Electrons) இங்கு பஞ்சமாதலின் எந்த அணுக்களோடும் வினைபுரியாமல் இருந்துவிடுகின்றன மந்தவாயுக்கள்.

கருத்துகள்