முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொது அறிவு (338)

3381. HAARP-ன் முழுமை?     High-frequency Active Auroral Research Program  3382. HAARP தொழில்நுட்பத்தின் மூலமாக என்ன செய்யமுடியும்?      செயற்கையாக பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களை ஏற்படுத்த முடியும்.  [ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் கருத்து என்னவென்றால், அயனி மண்டலத்தை (Ionosphere) ஆராய்ச்சி செய்வதற்காகதான் HAARP தொழில்நுட்பம் பயன்படுகிறது என்பதுதான்.] 3383. HAARP தொழில்நுட்பத்தை எந்த நாடு பயன்படுத்துகிறது?      அமெரிக்கா  [அயனி மண்டலத்தை பலத்த அலைக்கற்றறைகளால் தாக்குவது தான் அந்த ஆராய்ச்சியின் முதல் படி.] 3384. முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய நாடு?      டென்மார்க்  3385. இலக்கண முறைப்படி இல்லாமலிருந்தும் இலக்கணம் போல் தோன்றுவது?      இலக்கணப்போலி  3386. மாம்பழத்தின் தாயகம்?     இந்தியா  [ முக்கனிகளில் முதல் கனி ! பழங்களின் ராஜா என பட்டம் ! இந்தியா, பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளின் தேசிய கனி ! மாம்பழம் மாம்பழம் தான் ! ] 3387. இந்தியாவின் முக்கிய வீதிகள் இருபுறமும் மாமரம் நட்ட மன்னர்?      அசோகர் (கல்வெட்டு செய்தி)  3388. மாம்பழம் - பெயர்க்காரணம்?      மன்னருக்கெல

பொது அறிவு (337)

3371. நாஞ்சில் எனப்படுவது?     ஒரு மலை  3372. நாஞ்சில் நாடு எனப்படுவது?      நாஞ்சில் மலையை தன்னகத்தே உடைய நிலப்பகுதி  3373. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் பெருவாரியாக கிடைக்கும் மாவட்டம்?      நாகப்பட்டினம்  3374. தென்னிந்திய காஷ்மீர் எனப்படும் மலைப்பகுதி?      மூணார்  3375. குற்றாலத்தில் மொத்தம் எத்தனை அருவிகள் உள்ளன?      ஒன்பது  [குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. அவையாவன, பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகதேவியருவி, பழையகுற்றால அருவி மற்றும் தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.] 3376. அதிகளவு குளங்கள் உடைய தமிழக மாவட்டம்?     இராமநாதபுரம்  3377. கேள்விக்குறி முதன்முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது?      இலத்தீன்  3378. மதுவிலக்கை வலியுறுத்தி இராஜாஜி நடத்திய இதழின் பெயர்?      விமோசனம்  3379. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?      திருப்பூர்  3380. அரசியல் அறிவியலின் தந்தை?      அரிஸ்டாட்டில் 

­Maruthangili

Once upon a time, there stood a Arjun arboreal - முன்பொரு காலத்தில், ஒரு மருதமரம் (Arjun Arboreal) இருந்தது. In the canopy of the Arjun tree, there resided a hollow - மருதமரத்தின் மேற்பகுதியில் (In the canopy), ஒரு பொந்து (Hollow) இருந்தது. A young shepherd lad witnessed a ring-necked parakeet soaring forth from within that hollow - ஓர் இளம் இடப்பையன், ஒரு மருதங்கிளி அந்த பொந்தினுள்ளிருந்து பறந்து செல்வதை (Soaring Forth) கவனித்தான். He resolved to ascend and take the fledgling parakeet offspring in the hallow home with him - அவன், மரம் ஏறி (Ascend) மரப்பொந்திலுள்ள கிளிப்பிள்ளையை தன்னோடு வீட்டிற்கு எடுத்துசெல்ல தீர்மானித்தான். He ascended and inserted his hand into the aperture - அவன் மரத்திலேறி, தன் கையை பொந்தினுள் (Aperture) நுழைத்தான்.  He felt a sharp nip - அவன் ஒரு கூறான கடியை (Sharp Nip) உணர்ந்தான்.  He surmised that the parrot fledgling was the source of the bite - அவன் தன்னை கடித்தது (Source of The Bite) கிளிப்பிள்ளை (The Parrot Fledgling) என நினைத்துக் கொண்டான் (Surmised). He

அடக்கம் உடைமை

குறள் : 121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். விளக்கம் : அடக்கம் என்பது பெரும் நற்குணம். அடக்கம் உடையவர்கள், வசீகரமானவர்கள். பலரும் அத்தகையோரின் சொல்லுக்கு செவிமடுப்பர். பலரும் அத்தகையோரை பின்பற்றுவர். அடக்கமுடையவர்கள், அடங்காதவரையும் அடக்கும் சொல்லின் செல்வர்கள். அவர்தம் சொல்லிலும் அடக்கம் தோய்ந்திருக்கும். உளவியற்படி, அடங்காமல் பலமணித்துளிகள் நம்மை வன்சொற்களால் தாக்குபவரை, சற்றே அமைதிகொண்டு அடக்கமாக கேட்கப்படும், “முடிச்சிட்டீங்களா?” என்ற ஒரு கேள்வியே, மனங்கனிய வைக்கும். அடங்குதல் என்பது ஒரு மறுமைகுறித்த பதமும் தான்! ஓக அடக்கத்தில் உயர்வாழ்வு பெற்றோரை, “அடங்கியவிட்டார்” என்பார்கள். தமிழர் இறையாண்மையிலுள்ள பல ஆன்றோர்களும், தெய்வங்களும் இவ்வண்ணம் அடங்கியவர்கள்! அவ்வாறு அடங்கத் தவறி இறந்தோரை, “தவறிவிட்டார்” என்பர். அதாவது, அமரத்தன்மை அடையாமல் அடக்கம் தவறிவிட்டார் என்பர். தமிழர் ஆன்மயியல்படி, ஓகத்தில் அடங்குபவரும் வீரதீர மரணங்கண்டோரும், பெருவாழ்வடைவர். மற்றவர், மண்மயமாவர்!!! குறள் : 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம் : எவ்வளவுத

நடுவு நிலைமை - திருக்குறள்

குறள் : 111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். விளக்கம் : வகைகள் இல்லாமல் எதுவுமில்லை. சில வகைகள் நிறங்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில வகைகள் குணங்களால் ஏற்படுத்தப்பட்டவை. இயற்கையே பல வகைகளை பிரிக்கிறது. தொழில்களாலும் வகைகள் ஏற்பட்டன. சில வகைகளோ, இறைவனின் பெயரால் பிரித்தாளுகைக்காக ஏற்படுத்தப்பட்டவை. இந்த வகைகளையெல்லாம் அறிந்து, யாதொன்றிடமும் ஓரங்கள் காட்டாமல் இருத்தல் வேண்டும். யாவரும் எம்மவரே என்று நடத்தல் வேண்டும். “உள்ளவனுக்கு ஒன்று” என ஓரங்கள் பார்த்தல் கூடாது. எளியோரைக்கண்டு இகழுதலும், வலியோரைக்கண்டு மகிழுதலும் கூடாது. “மதிப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்!” என எல்லோரிடமும் சமரசமாக வாழுவதே, நடுவுநிலைமை. குறள் : 112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. விளக்கம் : நடுவுநிலைமை உடையவர்தம் செல்வம் என்றும் அழிவதில்லை. ஒரு சிறிய உதாரணத்தை காண்போம். இந்தியநாடு, அணிசேரா கொள்கைகளை பின்பற்றுகிறது. இந்தியா போன்ற நடுநிலைநாடுகள் செழிக்கும் என பிரிட்ஜ்வாட்டர் நிறுவனர் ரே-டாலியோ முதலானவர்கள் கருத்து பகிர்கின்றனர். உண்மைதான்… போர்கள் ஏற்படுத்தும் “ஆயுதசெலவுகள

செய்நன்றியறிதல் - திருக்குறள்

குறள் : 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. விளக்கம் : உதவி என்பது உண்மையில், எந்த பதில் பயன்களையும் எதிர்பாராமல் செய்யப்படுவதுதான். ஒருத்தருக்கு ஒருத்தர் பயன் எதிர்பாராமல் உதவி வாழுவதே மனிதத்தன்மை. இக்காலத்தில், மனிதனிடம் இருந்த ஈசத்தன்மை மறைந்து நீசத்தன்மை மிகுந்திருப்பதனால், தன்னலம் என்ற ஒரு நீசத்தனமும் மிகுந்திருக்கிறது. அவ்வாறு இருக்க, ஒருவர் எந்த ஒரு நன்மையும் நம்மால் இதுவரை பெறாமலிருந்தும், எவ்வித தன்னலமுமின்றி உதவுகிறார் எனில் அவரது குணம் சாயுச்சியமான பெருமைக்குரியது. புண்ணியம் கிடைக்கும் என்ற தன்னலத்தில் சிலர் உதவுவதுண்டு. இவற்றையெலாம் கடந்து நிற்கும், செய்யாமல் செய்யும் உதவிக்கு கைமாறாக மண்ணக விண்ணகத்தில் எதைதான் அளித்திடமுடியும்!?  குறள் : 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம் : சிலரது இருப்பினை நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை… காலமே, அவர்களை நம் மனதிற்கு நெருக்கமாக்குகிறது. சிலர் இதயத்திற்கே நெருக்கமாகிவிடுவதுமுண்டு. அவர்கள், நெருக்கடியான காலத்தில் உதவுபவர்கள். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்” எனும் போது,

இனியவை கூறல் - திருக்குறள்

குறள் : 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம் : செம்பொருள் எனும் அறவழியை அறிந்துணர்ந்து புரிந்தொழுகும் சான்றவர்களின் நாவில் பிறக்கும் சொற்கள் மட்டுமே, அன்பில் தோய்ந்தவையாகவும், எத்தகைய உள்ளர்த்தமும் பெறாத மனவெளிப்பாடாய் இருக்கும்! படிறு என்பது கள்ளம் என பொருள்படும்! படிறுபொருந்திய பொய்யர்களின் வாய்தோன்றும் வார்த்தை, வன்சொல்லாகவோ அல்லது இன்சொல்லாய் தென்படும் வன்சொல்லாகவோ மட்டுமே இருக்கும்! “பொய்யரோடு அன்பு பொருந்தாதே! மெய்யரோடு அன்பு மேவியிரு என் மகனே!” என்பது வல்லாத்தான், அய்யா வைகுண்டர் வாக்கு. செம்பொருள் கண்டோரின் வார்த்தைகள், மழை கண்ட மலரைபோல இதமானவை!  குறள் : 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம் : மன சம்மதத்துடன் ஒருவருக்கு ஈதலைக்காட்டிலும், முகம் சிரித்து வாய்மொழியும் இனியசொல்லானது, மிக நன்று. சிலரிடம் ஈவதற்கு பொருள் இருப்பதில்லை. ஆயினும், தான் ஒன்றை பிறருக்கு தரவேண்டுமே என எண்ணும்போது, முகமலர்ச்சியுடன் நற்சொற்களை ஈயலாம். அத்தகையைவர்கள், உண்மையில் மிக நல்லவர்கள். உடைந்திருக்கும் மனத்திற்கு, நல்ல ஆறுதல் மிகுந