முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது அறிவு (334)

3331. உலகிலேயே மிக அதிகளவு கதிரியக்க தன்மை (Radioactive) உடைய தனிமம்?     ரேடியம் [யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் அளவு கதிரியக்க தன்மை உடையது.] 3332. மின்னும் தன்மையுடைய பொருட்கள் எதனால் உண்டாக்கப்பட்டன?      ரேடியம் [இருட்டில் மின்னும் பொருட்களை ஒருகாலத்தில் ரேடியம் பயன்படுத்தி தான் உருவாக்கியுள்ளனர். அதன் அதி தீவிர கதிரியக்க தன்மையின் காரணத்தால் அதனை பயன்படுத்தும் வழக்கம் குறைந்துள்ளது.] 3333. ரேடியத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்?      மேரி கியூரி மற்றும் அவரது கணவர் பியூரி கியூரி [யுரேனியத்தை தாதுவிலிருத்து பிரித்த பின்னரும் தாது மின்னிக்கொண்டிருப்பதை கண்டு வியந்து தாதுவை ஆராயும்போது ரேடியத்தை முதன்முதலாக கண்டுபிடித்தனர். அதுபோக, அதே தாதுவில் பொலோனியம் என்ற ஒரு தனிமத்தையும் கண்டுபிடித்தனர். மேரி கியூரியின் தாய் நாடான போலந்தின் நினைவாக பொலோனியம் என பெயர் வைத்தனர். ரேடியமும் பொலோனியமும் ஒருசேர கண்டறியப்பட்ட சகோதரர்கள்/சகோதரிகள்.] 3334. ரேடியம் புற்றுநோய் சிகிச்சையில் உதவுமா?      அக்காலத்தில் இதை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின்னர் , பல உயிர் இழப்புகளுக்கு பின் , ர

பொது அறிவு (333)

3321. அரத்தம் என்றால் என்ன?     குருதி/உதிரம் (இரத்தம்) 3322. சுத்தமான இரத்தத்தை இதயத்துக்கு எடுத்து செல்பவை?       தமனிகள் (Veins) [நற்குருதி பாய்ச்சுவன தமனிகள். இந்த இரத்தம் சிரை வழியே பாயும் இரத்தத்தை விட சற்று குளிரானது. ஆக்சிஜன் இதில் குறைவு. இது மிகவும் அடர்த்தியான சிவப்பு (Dark Red) நிறமுடையது.] 3323. அசுத்தமான இரத்தத்தை இதயத்திலிருந்து வெளியோற்றுபவை?       சிரைகள் (Arteries) [துர்குருதி வெளியேற்றுவன சிரைகள். இந்த இரத்தம் தமனி வழியே பாயும் இரத்தத்தை விட சற்று வெப்பமானது. ஆக்சிஜன் இதில் அதிகம். இது மிகவும் வெளிர் சிவப்பு (Bright Red) நிறமுடையது.] 3324. இரத்த பரிசோதனைகள் பெரும்பாலும் எந்த இரத்தத்தில் மேற்கொள்ளப்படுகின்றன?      தமனி இரத்தம் (Venous Blood) 3325. இரத்தம் உவர்ப்பு சுவை கொண்டிருக்க காரணம்?       உடலில் 85% சோடியம் இரத்தத்தில் தான் உள்ளது. இதுவே இரத்தத்தை உவர்ப்பு சுவையுடையதாக்குகிறது. 3326. உலக ரிசர்வ் கரென்சியாக (World Reserve Currency) அமெரிக்க டாலர் இருக்க காரணம்?     உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களில், நாம் வாங்கும் பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை Sett

பொது அறிவு (332)

3311. புத்தரின் கண்கள் பாதி திறந்த நிலையில் இருக்க காரணம்?     இது ஒரு புத்த யோக பயிற்சியாக கருதப்படுகிறது. அதாவது, முழுவதுமாக கண்களை மூடினால் தூங்கிவிடக்கூடும் என்பதனால், பாதி திறந்த நிலையில் புத்தர் யோகம் புரிவதுண்டாம். [அண்மையில் , நான் வாசித்த ஒரு கவிதையில் , "ஆசையையெல்லாம் துறந்த புத்தர் ஏன் கண்களை மூடி தவம் செய்யவேண்டும்?" என்ற வரியைக் கண்டேன்‌. கண்ணை திறந்து வைத்தாலும் எதன் மீதும் ஆசை வராதே !? துறந்தாயிற்றே !? என்ற பொருளில் கவிஞர் கவிந்துள்ளார். அதை பார்த்தவுடன் என்றோ படித்த நியாபகம்.... புத்தரின் மலர் முகத்தில் பாதி மூடிய கண்கள். பாதி திறந்திருக்கும் கண்களை முழுவதுமாக கவிதையில் மூடிவிட்டார் நம் கவிஞர்.] 3312. போதி தருமருக்கு கண் இமைகள் கிடையாதா?      உண்டு.... ஆனால்... [ஒரு சீன நாட்டு கதையின் படி, போதிதர்மர் ஒரு முறை தவம் இருக்கும்போது, தூங்கிவிட்டாராம். உடனே சினத்தில் தன் கண் இமைகளை வெட்டி எறிந்துவிட , அவை தேனீர் செடிகளாக முளைத்தனவாம். அன்றிலிருந்து, துறவியற்கு தூங்காமலிருக்க அந்த செடிகளிலிருந்து செய்த தேனீர் (Tea) கொடுக்கப்பட்டதாம். அதுவே காலப்போக்கில், மக்களுக்கும்

பொது அறிவு (331)

3301. நிலத்தில் மிக அதிகமாக காணப்படும் உலோகம்?     அலுமினியம் 3302. தமிழ்நாட்டில் அதிகளவில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம்?      விருதுநகர் 3303. பல் இல்லாத மிகப்பெரிய பாலூட்டி?     நீலத்திமிங்கலம் 3304. சர்வதேச T20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர்?      சுரேஷ் ரெய்னா 3305. IPL போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர்?       மணிஷ் பாண்டே 3306. கோவை குற்றாலம் எனப்படும் அருவி?     சிறுவாணி அருவி 3307. தமிழ்நாட்டின் தூய்மையான மாவட்டம்?       கோயம்புத்தூர் 3308. தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் தொடங்கப்பட்ட மாவட்டம்?     கோயம்புத்தூர் (டிலைட் திரையரங்கம்) 3309. கோயம்புத்தூரின் பிறந்த நாள்?      நவம்பர் 24 [1804ஆம் ஆண்டு, ஆங்கிலேய ஆட்சியில் தான் , நவம்பர் 24ல் கோவைக்கு "மாவட்டம்" எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே, அந்த நாளை கோயம்புத்தூரின் பிறந்தநாள் என்கின்றனர்.] 3310. கொவ்வை பழம் எனப்படுவது?      கோவைப்பழம் ["குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்" எனும் திருநாவுக்கரசரின் வரிகள் அழகுடைய செந்நிற உதடுகளை கோவை பழத்தோடு ஒப்பிடுகின்றன.]

பொது அறிவு (330)

3291. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிக பனைகள் உள்ளன?      தூத்துக்குடி [இந்தியா முழுவதும் 8 கோடி என்ற எண்ணிக்கையில் பனைகள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதில் , 4.5 கோடி பனைகள் தமிழகத்தில் தான் உள்ளன.] 3292. பூக்கள் மட்டும் பூத்து காயாத பனை?      ஆண் பனை 3293. கள்ளும் பதநீரும் எந்த பனையிலிருந்து அதிகம் பெறப்படுகின்றன?     ஆண் பனை [பெண் பனையின் பாலையை சீவி விட்டால் அதிகமாக பனை விளைச்சல் பாதிக்கப்படும்.] 3294. பனை மரத்தின் குடும்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?       அரிகேசியே (Arecaceae) [பனைமர குடும்பத்தில் தான் , தென்னை , பாக்கு , ஈச்சை , ஈந்து போன்ற மரங்கள் வரும்.] 3295. பனைமரம் ஒரு புல் வகை என வகைப்படுத்திய தமிழ் புலவர்?       தொல்காப்பியர் 3296. கறங்குதல் என்றால் என்ன?      சுழலுதல் [சிறுவயதில் பனை ஓலையில் காற்றாடி செய்து கருவைக்காட்டிற்குள் ஓடி அதை சுற்ற வைத்து மகிழ்ந்தவர்கள் நாம். அந்த பனை ஓலை காற்றாடியை கறங்கு என்றுதான் கூறுவதுண்டு. நெல்லையில் நம் பேச்சில் , தலைச்சுற்று என்பதை குறிக்க , "கெறங்கிட்டு" என்ற வழக்குச்சொல் உண்டு. ஆங்கிலத்தில் Ring என்ற சொல்லும் சுற்றினை க

பொது அறிவு (329)

3281. பவளப்பாறைகள் (Coral Reefs) என்பவை?     பவளம் என்பது உண்மையில் ஒரு விலங்கினம் (Animalia). இதனால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட் தான் பவளப்பாறை. 3282. பவளப்பாறைகளின் முக்கியத்துவம்?       புயல் தாக்கத்திலிருந்து கடற்கரைகளை காப்பாற்ற பவளப்பாறைகளை விட்டால் வேறாருமில்லை. கடலுக்குள் ஓர் ஆலமரம் எனலாம் பவளப்பாறைகளை.... எண்ணற்ற உயிரினங்களுக்கு இருப்பிட அடைக்கலமாக பவளப்பாறைகள் உள்ளன. மீன்பிடி தொழிலுக்கு பவளப்பாறைகள் அவசியம். ஏனெனில் பலதரப்பட்ட மீன்கள் பவளப்பாறைகளூடேதான் முட்டையிடுகின்றன‌. நுண் ஊட்டச்சத்து உருவாக்கத்தில் பவளங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. [அறிவியலால் நிரூபித்த பின்னரும் சில பிற்போக்கு பிதற்றல்வாதிகள், "பவளப்பாறைகள் எப்படியடா புயலை தடுக்கும்?" என்கின்றனர். தெர்மாகோல் ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்கும் அதிசயம் அரங்கேறும்போது, பவளப்பாறைகள் புயலை தடுப்பதில் ஒன்றும் தவறில்லையே...] 3283. கடலில் மீன்கள் எங்கு பரவலாக வாழ்கின்றன?     கடலில் வாழும் மீன்கள் மட்டுமல்ல... வீட்டில் நாம் வளர்க்கும் வண்ண மீன்களுக்கும், ஆழமான நீர்வசதியை விட , ஆழமற்ற அகன்ற நீர்வசதிதான் உகந்தது. இது எங்

பொது அறிவு (328)

3271. Ambidextrous என்றால் என்ன?     இடக்கை மற்றும் வலக்கை என இரு கைகளையும் நன்றாக பயன்படுத்தும் இயல்பு (Able to use both the hands equally well) [உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில், வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை அதிகாரியை (மோகன்லால்) கமல்ஹாசன் மிரட்டிட, காவல்துறையினர்  பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு , கமல்ஹாசன் இடது கையால் எழுதும் பழக்கம் உடையவர் என கண்டறிய , நான் இரு கையாலும் எழுதுபவன் என கமல்ஹாசன் கூறி , காந்தியடிகளும் அப்படிதான் என கூறுவார்.] 3272. Ambivert என்றால் என்ன?      மனிதர்களில் Extrovert‌ மற்றும் Introvert என இரண்டு வகைகள் உண்டு. Extrovert-ஆக இருப்பவர்கள் , மிகவும் வெளிப்படையாக பேசுபவர்கள். எதையும் எளிதில் வெளிப்படுத்துபவர்கள் (அளவான வாயாடிகள் எனலாம்)‌. ஆனால், Introvert ஆனவர்கள், தனக்கொன்று தெரிந்தும் தெரியாதது போல் இருப்பவர்கள். தன் இருப்பை அதிகம் வெளிக்காட்ட விரும்பாதவர்கள் (இருக்க இடம் தெரியாம இருக்க நினைப்பவர்கள்). இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்களே Ambiverts! 3273. Ambi என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள்?     இரண்டையுமே குறிப்பது என பொருள் [Ambi என்பதை , αம்

பொது அறிவு (327)

3261. பிப்ரவரி மாதம் எவ்வாறு அவ்வாறு பெயர்பெற்றது?     ரோமானிய கடவுள் பிப்பிரசிடமிருந்து இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது. பிப்பிரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். 3262. வருடத்தின் சிறிய மாதம்?      பிப்ரவரி [ஒரு வருடம் நெட்டாண்டா இல்லையா என தீர்மானிப்பதே பிப்ரவரி தான்!] 3263. நெட்டாண்டு (Leap Year) என்றால் என்ன?      பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டு. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இந்த ஆண்டு வரும். [லீப் ஆண்டில் 29ம் நாள் பிப்ரவரி இல் பிறப்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிறந்த நாள் வரும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிப்ரவரி 29ல் பிறந்தவர்.] 3264. ஏன் பிப்ரவரி மாதத்தில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் 29 நாட்கள்?      ஓர் ஆண்டு என்பது சூரியனை பூமி சுற்றிவரும் காலமாகும். பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகிறது. அப்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுதலாகிறது. ஆகவே ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாகும். லீப் ஆண்டு என்பது 366 நாட்கள் கொண்ட ஆண்டா

பொது அறிவு (326)

3251. கைவிடப்பட்ட பெண்களுக்காக டாக்டர்.முத்துலெட்சுமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இல்லம்?       அவ்வை இல்லம் 3252. கல்யாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?       திருநெல்வேலி 3253. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?       திருப்பூர் 3254. பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?       திருநெல்வேலி 3255. குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?      தென்காசி 3256. இந்திய பெருங்கடலின் பழைய பெயர்?       எரித்திரேயன் கடல் (Erythraean Sea) [திரை என்றாலே கடல் என்றுதான் பொருள். துறை என்றாலும் அதுவே ! தெண்டிரை என்பதும் கடல்தான்... எரித்திரேயன் என்ற வார்த்தையிலும் திரையை காணலாம். எரி + திரை => எரித்திரேயன். எரி என்றால் நெருப்பு என பொருள். திரை என்றால் கடல் என பொருள். செங்கடல் என்ற பெரும் கடல் பகுதி, இந்திய பெருங்கடலில் உள்ளதை காணலாம். அதன் பொருட்டுக்கூட எரித்திரேயன் என பெயர் பெற்றிருக்கலாம்‌.] 3257. அரலை மற்றும் நரலை என்ற சொற்களுக்கு என்ன பொருள்?      கடல் [அரி என்றாலும் கடல் என பொருளுண்டு.] 3258. மெரினா கடற்கரை என பெயர் வரக் காரணம்?       மெரினா என்பதற்கு இத்தாலிய மொழியில் "கட